Thursday, December 8, 2016

விரைதவழ் உற்று விழைதகு மாடத்து...

விரைதவழ் உற்று விழைதகு மாடத்து
உம்பரும் இன்னனார் முகத்து
விரைதரு சுவாசத்து அசைவுறு மதுவும்
மேவும் இவ் வேனிலம் போது
நிரை தரு யாமத்தின் பினை மூட்ட
நேர் வரு வீணை இன்னிசையும்
புரை தவிர் காதல் காளையர்க்கு எல்லாம்
போகமும் நுகர்ச்சியும் தருமால்!
(இருது சங்கார காவியம்) பாடல்-3

விரை = வாசனை
விழைதகு = விரும்பத்தக்க
உம்பர் = மேல் நிலம்
மாடத்து உம்பர் = நிலா முற்றம்
நேர்வரு = ஏற்றதாகிய


No comments:

Post a Comment