Thursday, December 8, 2016

மண்டிய நீல படலம் அது அகற்றி...

மண்டிய நீல படலம் அது அகற்றி
மதிதிகழ் நிசிகளும் தாரை
கொண்டியல் நீராவி மண்டப வகையும்
குளிர்மணி விதங்களும் சாந்தின்
அண்டிய தேய்வை செறிபனிக் குழம்பும்
அடுத்த இவ் வேனிலங் காலை
வண்டிவர் கோதாய் மாந்தருக்கு இதமாய்
மனமகிழ் பூப்பவாய்ந்தனவே!
 (இருது சங்கார காவியம்) பாடல்-2

நீலபடலம் = கரிய முகிற் கூட்டம்
நிசி = இரவு
தாரை கொண்டு இயல் = நீர்த்தாரையைச் சொரியும் குளியல் மண்டபம்
தேய்வை = அரைத்த சந்தனம்
வண்டிவர்  கோதாய் = வண்டு மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணே!



No comments:

Post a Comment