Showing posts with label அமிர்தமதனம். Show all posts
Showing posts with label அமிர்தமதனம். Show all posts

Friday, April 15, 2016

அமிர்த மதனம்

அமிர்த மதனம்

இந்த பிரபஞ்சம் உருவான விதத்தைத்தான் அமிர்த மதனம் என்பர்;

அமிர்த மதனம் என்றால் அமிர்தம் கடைதல் என்று பொருளாம்; தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து இந்த அமிர்தம் கடைதல் நிகழ்வை நடத்தினராம்; இது கிருத யுகத்தில் நடந்ததாம்; திருப்பாற்கடலைக் கடைந்தார்களாம்; அதைக் கடைவதற்கு மந்தர மலையை மத்தாக உபயோகித்தனராம்; வாசுகி என்னும் பாம்பை, மத்தைச் சுற்றும் கயிறாக பயன்படுத்தினராம்;

அவ்வாறு திருப்பாற்கடலைக் கடைந்தபோது, கீழ்கண்ட பொருள்கள் கிடைத்ததாம்;

விஷம் = கொடிய உஷ்ணம்;
லட்சுமி = இளமை, அழகு;
சந்திரன் = அப்ஜன்;
தந்வந்திரி
உச்சை சிரவம்   குதிரை வடிவம்;
கவுஸ்துபம் = சூரியன்;
பாரிஜாதம்,
ஐராவதம் = யானை வடிவம்;
கற்பகத்தரு,
காமதேனு,
அமிர்தம்.

இந்த பிரபஞ்சச் சுற்றலில் (கடைதலில்) மேற்சொன்ன பொருள்களே முதலில் தோன்றின. திருப்பாற்கடல் என்பது ஆகாயம் என்னும் இந்த பிரமாண்டம்; இது முதலில் ஆகாய உருவமாய் இருந்து, பின்னர் வாயு உருவமாகி, பின்னர் அக்கினி உருவமாகி, அதன்பின்னரே இந்த தோற்றம் கொண்ட பிரபஞ்சம் உருவானதாம்;

கிருத யுகம் என்பது இந்த பிரபஞ்சம் உருவானபோது உருவான யுகம் ஆகும்.

**