சளத்திற் பிணிபட் டசட்டு க்ரியைக்குட் டவிக்குமென்ற
னுளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேறொட்ட காவலனே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)
(அசுரனின் செருக்கை அழித்தவனே, எனது பிரம்ம
மயக்கத்தையும் தெளிவிப்பாய்!)