Showing posts with label உதிரக் குளத்தில் குதித்து. Show all posts
Showing posts with label உதிரக் குளத்தில் குதித்து. Show all posts

Sunday, January 11, 2015

உதிரக் குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து...

சளத்திற் பிணிபட் டசட்டு க்ரியைக்குட் டவிக்குமென்ற
னுளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்திற் செருக்கிக் கழுதாட வேறொட்ட காவலனே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

சளத்தில் பிணிபட்டு, அசட்டு கிரியைக்கு உட்பட்டு, தவிக்கும், எந்தன் உள்ளத்தில், பிரமத்தை (பிரம்ம மயக்கத்தை), தவிர்ப்பாய்அவ்வுணர்வு உரத்து, உதிரக் குளத்தில், குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து, வெற்றிக் களத்தில், செருக்கு கொண்டு, கழுது ஆட (பேய்கள் ஆட), வேலை ஓட்டிய காவலனே.
(அசுரனின் செருக்கை அழித்தவனே, எனது பிரம்ம மயக்கத்தையும் தெளிவிப்பாய்!)