Showing posts with label சப்பாணி கொட்டிய கை. Show all posts
Showing posts with label சப்பாணி கொட்டிய கை. Show all posts

Monday, January 12, 2015

குப்பாய வாழ்க்கையுட் கூத்தாடும் ஐவரில்...

குப்பாய வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
விப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பு
மப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருழய்யச்
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

குப்பாய வாழ்க்கையுள் (தோல்மூடியுள்ள இந்த உடம்பின் வாழ்க்கையுள்), கூத்தாடும் ஐவரிற் (ஆட்டம் போடுகின்ற ஐப்புலன்களும்), கொட்பு அடைந்த (சுழலும் வாழ்வில்), இப் பாச நெஞ்சினை, ஈடேற்றுவாய், இருநான்கு வெற்பும் (இரண்டு நான்குகளான எட்டு மலைகளுமான அட்டமலைகளும்), அப் பாதியாய் விழ, மேருங் குலுங்க, விண்ணாரும் உய்ய, (தேவர்களும் சிறக்க), சப்பாணி கொட்டியகை (சப்பாணி விளையாட்டில் கொட்டியகை), ஆறு இரண்டு கைககள் கொண்ட சண்முகனே.