Showing posts with label சும்மா இருக்க. Show all posts
Showing posts with label சும்மா இருக்க. Show all posts

Wednesday, January 14, 2015

பாதார விந்தம் அரணாக..

வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்த மரணாக வல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொளித்துச் சும்மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

வேத ஆகம, சித்திர வேலாயுதன், வெட்சி பூத்த (வெட்சிப் பூவைப் போல), தண்டைப் பாதார விந்தம் (தண்டை அணிந்த பாதங்கள்), அரணாக, அல்லும் பகலும், இல்லா, சூதானது அற்ற (குழப்பம் அல்லாத), வெளிக்கே, ஒளித்துச் சும்மா இருக்க, போதாய் இனி மனமே, தெரியாது ஒரு பூதர்க்குமே.