Showing posts with label செந்தேனும் புளித்து. Show all posts
Showing posts with label செந்தேனும் புளித்து. Show all posts

Sunday, January 11, 2015

கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து...

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை
விரும்புங் குமாரனை மெய்யன்பி னான்மெல்ல மெல்லவுள்ள
வரும்புந் தனிப்பர மானந்தந் தித்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)


பெரும் பைம் புனத்தினுள் (பெரிய பச்சை காட்டினில்), சிற்றேனல் காக்கின்ற (சிறு தினை கதிரை காவல் காக்கிற), பேதை கொங்கை (சிறு பெண்ணினை, வள்ளியை) விரும்பும், குமாரனை, மெய் அன்பினால், மெல்ல மெல்ல உள்ள (நினைக்க), அரும்பும், பரமானந்தம், தித்தித்து, அறிந்த அன்றே, கரும்புந் துவர்த்து, செந்தேனும் புளித்து கைத்து (கசந்து) விட்டதே!