Showing posts with label சௌகந்திகம் மலர். Show all posts
Showing posts with label சௌகந்திகம் மலர். Show all posts

Saturday, February 20, 2016

சௌகந்திகம் மலர்

சௌகந்திகம் மலர்
குபேரனின் நந்தவனத்தில் இந்த சௌகந்திக மலர்கள் நிறைந்த தடாகம் உள்ளது;
ஒருநாள், குபேரனின் இந்த நந்தவனத்தில், காற்று வேகமாக வீசுகிறது; அப்போது ஒரேயொரு சௌகந்திகம் மலர் மட்டும் அந்தக் காற்றில் பறந்து சென்று, பூமியில் வசிக்கும் திரௌபதையின் மடியில் விழுகிறது; அவள் அந்த சௌகந்திக மலரை எடுத்துப் பார்க்கிறாள்; பூமியில், இதுவரை இப்படிப்பட்ட ஒரு அழகான மலரை பார்த்ததில்லையே என வியக்கிறாள்; இது பூமியில் எங்கு முளைத்திருக்கிறது என்று தெரியவில்லையே என்று தவிக்கிறாள்;
உடனே பீமனை அழைக்கிறாள்; இந்த சௌகந்திக மலரை அவனிடம் காண்பித்து, இப்படிப்பட்ட மலர்கள் இருக்கும் தோட்டத்துக்குச் சென்று அந்த மலர்களை எனக்கு கொண்டுவருக என்று கேட்கிறாள்;
பீமன் காட்டில், மலைகளில் அலைகிறான்; அங்கு அனுமனைப் பார்க்கிறான்; அவர் வாலை நீட்டிக் கொண்டு படுத்திருக்கிறார்; வாலை மடக்கிக் கொள்ளும்படி கேட்கிறான்; அவரோ, "என் வாலை எடுத்து சுருட்டி ஒதுக்கி வைத்துவிட்டு நீ அந்த வழியே போகலாம்" என்று அனுமன் கூறுகிறார்: அவன், அனுமனின் வாலைத் தூக்க முயற்சிக்கிறான், முடியவில்லை; அப்போதுதான் அவர் அனுமன் என்று அறிமுகம் அவனுக்குக் கிடைக்கிறது; அவரிடம் வந்த விபரத்தைக் கூறுகிறான்; அவர் குபேரனின் நந்தவனத்துக்குப் போகச் சொல்கிறார்; அங்கு சென்று, அந்த சௌகந்திக மலர்களைப் பறித்து வந்து, திரௌபதைக்கு கொடுக்கிறான்;

**