Showing posts with label தத்துவஞானம். Show all posts
Showing posts with label தத்துவஞானம். Show all posts

Saturday, February 20, 2016

தெய்வங்கள்

வேதம் என்ற தமிழ்ச் சொல், "வித்" என்ற சமஸ்கிருதச் சொல்லடியில் இருந்து தோன்றி இருக்கலாம்; வித் என்றால் "அறிதல்" என்று பொருளாம்;
அறிவின் இரு வகைகள்:
அறிவில் இரண்டு வகைகள் உண்டு; தன் வாழ்க்கையை இனிதாக வாழ்வதற்கு, உலகில் உள்ள பொருள்களை எல்லாம் எவ்விதமாகப் பயன்படுத்தலாம் என்று அறிவது ஒரு வகை;
மற்றொன்று, இந்த வாழ்க்கையும், இந்த உலகமும் எதற்காக என்பதை அறிவது இரண்டாவது வகை; இந்த இரண்டாவது அறிவுக்குத் தேவைப்படுவதே வேதங்கள்;
வேதங்கள்:
வேதங்கள் மனிதரால் செய்யப்பட்டவை அல்லவாம்; எனவே அதை "எழுதாமறை" என்று கூறுகின்றனர்; இறைவனால் சொல்லி கேட்கப்பட்டவையே வேதம் என்கின்றனர்; அதனால்தான் இதை "சுருதி" என்கின்றனர்; சுருதி என்றால் "காதால் கேட்டது" எனப் பொருளாம்; குரு, தன் சீடனிடம் சொல்லி, அதைக் கேட்ட சீடன், தன் சீடனுக்குச் சொல்லி, இவ்வாறு வழிவழியாக வந்தவையே வேதம் ஆகும்;
இந்த வேதங்களில் கூறப்படும் மந்திரங்கள், இயற்கையாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றைத் தெய்வங்கள் ஆக்கி, அவற்றுக்குச் செய்யும் வழிபாடுகளே!
இவையல்லாமல், மின்னல் முழக்கம், முகில், மழை, கடல் இவைகளையும் தெய்வங்களாக ஆதிமனிதன் கருதினான்; தனக்கு எந்தவித கேடும் செய்ய வேண்டாம் என இந்த தெய்வங்களை வேண்டிக் கொள்வான்; மாறாக, தனக்கு நன்மைகளை செய்யும்படி இந்த தெய்ங்களை வேண்டிக் கொள்வான்;
அக்கினி ஒரு தெய்வம்:
அக்கினியும் ஒரு தெய்வம்; மற்ற தெய்வங்களுக்கு, மனிதன் படைக்க வேண்டிய பொருட்களை அவைகளிடம் சேர்ப்பதற்கு, இந்த அக்கினி கடவுள்தான் உதவி செய்கிறார்; அதனால்தான், எந்தத் தெய்வத்துக்கு கொடுக்கும் பொருளையும், இந்த அக்கினியில் போட்டு அதன்மூலம் மற்ற தெய்வங்களுக்குச் சேர்க்கிறான்;
மனிதன் ஒழுக்கம் தவறினால், தெய்வத்தின் சீற்றத்திற்கு ஆளாகிறான்; எந்த தவறையும் தெய்வத்திடமிருந்து மறைக்க முடியாது என மனிதன் நம்புகிறான்; ஒழுக்கத்திற்கு தெய்வமாக வருணன் இருக்கிறான்;
தெய்வங்களில் பல பிரிவுகள்:
தெய்வங்களை மூன்று பெரிய பிரிவுக்குள் அடக்கினர்:
விண்ணுக்குறிய ஒரு பிரிவு; இதில் வருணன், மித்திரன், போன்றவர் இருப்பர்;
மண்ணுக்குறியவை மற்றொரு பிரிவு; இதில் அக்கினி அடங்கும்:
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே வாயு மண்டலம் மூன்றாவது பிரிவாகும்; இதில் இந்திரன், வாயு போன்றோர் அடங்குவர்;
 (நன்றி: தத்துவ ஞான சிந்தனை நூலிலிருந்து)