Thursday, June 2, 2016

நளன்-தமயந்தி

நிஷத தேசத்தின் மன்னர் வீரசேனன்; இந்த மன்னர் வீரசேனனின் மகனே நளன்; நளனின் மனைவி தமயந்தி; இவர்களின் மகன் இந்திரசேனன்: மகள் இந்திரசேனை;
மன்னர் நளன், கொடையிலும், கல்வியிலும், அழகிலும், ஆண்மையிலும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மன்னர்;
இவன் கீர்த்தி எல்லா நாடுகளுக்கும் பரவியது; அதை ஒரு அன்னப்பறவை வேறு நாட்டில் உள்ள தமயந்திக்கு. நளனின் சிறப்புகளைச் சொல்கிறது.
தமயந்திக்கு சுயம்வரம் நடக்கிறது; அங்கு எல்லா நாட்டு மன்னர்களும் வந்திருக்கிறார்கள்; இந்திரனும் வந்திருக்கிறான்; ஆனால், தமயந்தி, நளன் எங்கிருக்கிறான் என்று கண்டு, அவனுக்கே மலை இட்டு மணந்து கொள்கிறாள்;
ஆனால் விதி வலியது;
கலி புருஷனுக்கு இவர்களின் சந்தோஷ வாழ்க்கை பொறாமையை உண்டு பண்ணியதாம்; எனவே, கலி, வேறு ஒரு மன்னனான புஷ்கரன் என்னும் மன்னனை ஏவி விடுகிறான்; நளனுடன் நீ சூதாடு; அவனை உன்னால் வெல்ல முடியும்; அதற்குறிய உதவியை நான் செய்கிறேன் என்று கலி கூறி தைரியம் ஊட்டியது; அவனும் நளன் மன்னருடன் சூது விளையாடுகிறான்; அந்தச் சூதில் நளன் தோற்றுவிடுகிறான்; நளன், தன் மொத்த நாட்டையும் சூதில் இழக்கிறான்; அவனும் அவன் மனைவி தமயந்தியும் உடுத்திய ஆடையுடன் காட்டுக்குப் போகிறான்; கல்லும் முள்ளும், வெயிலும் வருத்த வாழ்கிறார்கள்; அவள் படும் துன்பத்தை பொறுக்க முடியாமல், இவளை விட்டு விலகி விட்டால், அவள் தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று வாழலாமே என்று எண்ணுகிறான்; நான் மட்டுமே காட்டில் வாழ வேண்டும்; இவள் ஏன் இந்தத் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என நினைத்து, ஒருநாள் இரவில் அவளை விட்டுச் சென்று விடுகிறான்;
அவள் எழுந்து பார்க்கிறாள்; கணவரைக் காணவில்லை; எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை; ஒருவழியாக, அவள் தன் பெற்றோர் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுகிறாள்;
பின்னர், நளன், தன் ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்றான்;
இந்தக் கதையை விரித்துச் சொல்லும் நூல் தான் "நைஷதம்".
இதை தமிழில் இதே பெயரில் சொல்லி உள்ளனர்.


நவராத்திரி

நவராத்திரி

இந்த நவராத்திரி பூஜைகளைச் செய்தால், ஒருவர் தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாமாம்.

இந்த நவராத்திரி, ஆஸ்வயுஜ மாதத்தில் (ஐப்பசி மாதத்தில்) சுக்கில பிரதமை முதல் ஒன்பது ராத்திரிகள்தான் நவராத்திரி ஆகும்.

கிருத யுகத்தில் ஒரு அரசன் இருந்தான்; அவன் பெயர் சுகேதன்; அவன் தன் இராஜ்ஜியத்தை இழந்தான்; மனைவியை கூட்டிக் கொண்டு காட்டுக்குப் போகும்படி ஆகி விட்டது; காட்டில் வாழ்கிறான்;

அந்தக் காட்டில், ஒரு முனிவர் இருக்கிறார்; அவர் பெயர் ஆங்கிரசன்; அவரை, இந்த மன்னன் சென்று பார்க்கிறான்; அந்த ரிஷி, இந்த மன்னனுக்கு, ஒரு பூஜைமுறையைச் சொல்லிக் கொடுக்கிறார்; அதைச் செய்தால், நீ இழந்தவற்றை எல்லாம் திரும்பப் பெறலாம் என்றும் சொல்கிறார்;

அதுவே நவராத்திரி பூஜை; அதை செய்துவருகிறான்; இழந்த நாடு நகரங்களை எல்லாம் திரும்பப் பெற்றான்;

நாட்டுக்கு வந்தபின்னரும் அந்த பூஜையைத் தொடர்ந்து செய்து வந்தான்; அது முதல், எல்லோரும் இந்த பூஜையைச் செய்ய ஆரம்பித்தனராம்;

துர்க்கை, லக்ஷூமி, சரஸ்வதி இம்மூவரையும் முறையே ஒவ்வொருவருக்கும் மூன்று நாட்கள் வீதம் ஒன்பது நாட்கள் பூசித்து வர வேண்டுமாம்; ஒன்பாதம் நாள் ஆயுதங்களையும் புத்தகங்களையும் வைத்து ஆராதித்து வருவர்;

மறுநாள் பத்தாம் நாளே தசமி திதி; இதையே விஜய தசமி என்பர்; வெற்றி கிடைக்கும் நாள்!



கணபதி மந்த்ரம்

கணபதி மந்த்ரம்

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவீம் கவீனா முபமஸ்ர வஸ்தமம்.
ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம்
ப்ரம்மணஸ்பத ஆ ந:
ஸ்ருண்வன்னூதிபிஸ்ஸீத ஸாதனம்.
(யஜூர் வேதம் 4.5)


“தேவர் கூட்டத்திற்குத் தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றவரே உம்மைப் போற்றி அழைக்கிறோம்! நீர் அறிஞர்களுள் பேரறிஞர்! ஒப்பற்ற புகழ்படைத்தவர்! முதன்மையானவர்களுள் தலைசிறந்தவர்! வேதங்களுக்கு நாயகர்! எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு எங்களைக் காப்பதற்கு விரைந்து வந்தருள்வீராக!

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்

கந்தர் சஷ்டி கவசம்
(செந்தில் மேவும் சரவணன்)
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்த
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகு உடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற் சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்
திருவடி அதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு......

Tuesday, May 31, 2016

சரவண பவனார் சடுதியில் வருக

கந்தர் சஷ்டி கவசம்
(செந்தில் மேவும் சரவணன்)

சரவண பவனார் சடுதியில் வருக
சரவண பவச ரரரர ரரர
ரிவண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா நமோ நம
நிபவ சரவண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டு ஆயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும
உய்யொளி சௌவும் உயிர் அரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளர் ஒளியையும்
நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி ஒவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்...

Monday, May 30, 2016

சஷ்டியை நோக்க சரவண பவனார்

கந்தர் சஷ்டி கவசம்
(செந்தில் மேவும் சரவணன்)

சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்யர்க்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட
மையல் நடம் செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்க என்று வந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

Friday, May 27, 2016

சிவதருமோத்தரம்

சிவதருமோத்தரம்

மறைஞானசம்மந்தர் "சிவதருமோத்தரம்" என்ற நூலைச் செய்தார். இது மொத்தம் 12 இயல்புகளைக் கொண்டது.
அவை:

பரமதருமாத இயல்
சிவஞானதான இயல்
ஐவகை யாக இயல்
பலவசிட்டகாரண இயல்
சிவதரும இயல்
பாவ இயல்
சுவர்க்க நரக இயல்
சனன மரண இயல்
சுவர்க்க நரக சேட இயல்
ஞான யோக இயல்
பரிகார இயல்
கோபுர இயல் 

சிருஷ்டி ஆதி பத்தியம்

சிருஷ்டி ஆதி பத்தியம்

பூமிக்கு பிருது சக்கரவர்த்தியும்,
யாகம், விரதம், நட்சத்திரங்களுக்கு சந்திரனும்,
ஜலத்துக்கு வருணனும்,
தனத்துக்கும், யட்சகர்களுக்கும் குபேரனும்,
துவாதசாதித்தியர்களுக்கு விஷ்ணுவும்,
வசுக்களுக்கு அக்கினியும்,
பிரஜாபதிகளுக்கு தட்சனும்,
தேவர்களுக்கு இந்திரனும்,
தைத்தியர், தானவர்களுக்கு பிரஹலாதனும்,
பிதிர்களுக்கு யமனும்,
பசுபூதாதிகளுக்கு சிவனும்,
மலைகளுக்கு இமயமும்,
நதிகளுக்கு சமுத்திரமும்,
கந்தருவ வித்தியாதர கிந்நர கிம்புருஷர்களுக்கு சித்திர ரதனும்,
சர்ப்பங்களுக்கு வாசுகியும்,
திக்கஜங்களுக்கு ஐராவதமும்,
பட்சிகளுக்கு கருடனும்,
குதிரைகளுக்கு உச்சைசிரவமும்,
மிருகங்களுக்கு சிங்கமும்,
இவர்களே பிரபஞ்ச சிருஷ்டி காலத்தில் ஆதி பத்தியம் பெற்றவர்கள்.


சரணம் சரணம் சண்முகா சரணம்


 திருப்பரங்குன்றுறை திருமகன்

திருப்பரங்குன்று உறை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத் துறை உறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப் பொருளே
வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே
ஒய்யார மயில் மேல் உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
பழனியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ
விராலி மலை உறை விமலா நமோ நமோ
மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ
சூர சம்கார துரையே நமோ நமோ
வீரவேல் ஏந்தும் வேலனே நமோ நமோ
பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ
கண்களீர் ஆறுடை கந்தா நமோ நமோ
கோழிக் கொடியுடைக் கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சசச சசச ஓம் ரீம்
ரரர ரரர ரீம் ரீம்
வவவ வவவ ஆம் ஹோம்
ணணண ணணண வாம் ஹோம்
பபப பபப சாம் சூம்
வவவ வவவ கௌம் ஓம்
லல லிலி லுலு நாட்டிய அட்சரம்
கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக
பக பக பக பரந்தாமா வருக
வருக வருகவென் வள்ளலே வருக
வருக வருக நிஷ் களங்களனே வருக
தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச்
சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே
அல்லும் பகலும் அனுதினம் என்னை
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
வல்லவிடங்கள் வராமல் தடுத்து
நல்ல மனதுடன் ஞான குரு உனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்து நீ வரங்கள்
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
கந்தா கடம்பா கார்த்திகேயா
நந்தன் மருகா நாரணி சேயே
எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை
தண்ணளி அளிக்கும் சாமி நாதா
சிவகிரி கயிலை திருப்பதி வேளூர்
தவக்கதிர் காமம் சார் திருவேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலி மலை முதல்
தன்னிகரில்லாத் தலங்களைக் கொண்டு
சன்னதியாய் வளர் சரவண பவனே
அகத்திய முனிவனுக்கு அன்புடன் தமிழைச்
செகத்தோர் அறியச் செப்பிய கோவே
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம்
நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாய் நிறை மெய்ப்பொருளோனே
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே
வெற்றிக் கொடியுடை வேளே போற்றி
பக்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி
அத்தன் அரி அயன் அம்பிகை லட்சுமி
வாணி உடனே வரையுமாக் கலைகளும்
தானே நானென்று சண்முகமாகத்
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்
பூரணிகிருபை புரிபவா போற்றி
பூதலத்துள்ள புண்ணிய தீர்த்தங்கள்
ஓதமார் கடல்சூழ் ஒளிர் புவிகிரிகளில்
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்
பண்ணும் நிஷ்டைகள் பலபல எல்லாம்
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம்
எள்ளினுள் எண்ணெய் போல் எழிலுடை உன்னை
அல்லும் பகலும் ஆசாரத்துடன்
சல்லாபமாய் உனைத் தானுறச் செய்தால்
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி
பல்லாயிர நூல் பகர்ந்தருள் வாயே
செந்தில்நகர் உறை தெய்வயானை வள்ளி
சந்தகம் மகிழும் தயாபர குகனே
சரணம் சரணம் சரவண பவ ஓம்
அரன்மகிழ் புதல்வா அறுமுகா சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
 **


குமரன் அடி நெஞ்சே குறி!

குமரன் அடி நெஞ்சே குறி!

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி
துதிப்போர்க்கு வல்வினைபோம்
துன்பம் போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம்
பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும்
நிமலர் அருள் கந்தர்

சஷ்டி கவசம் தனை.
**

Thursday, May 26, 2016

விநாயகர் சரணம்

விநாயகர் சரணம்

அணுவிற்கு அணுவாய்
அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற
கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும்
விளங்க நிறுத்திக்
கூடும் மெய்த் தொண்டர்
குழாத்துடன் கூட்டி
அஞ்சு கரத்தின்
அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின்
நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத்
தந்து எனை ஆண்ட
வித்தக விநாயகா!
விரை கழல் சரணே!
**

Thursday, May 19, 2016

தட்சிண கைலாசம்

தட்சிண கைலாசம்

நைமிசாரண்ய வாசிகளாகிய சௌனகர் முதலான முனிவர்கள் கோமதி ஆற்றங்கரையில் தீர்க்கசத்திரம் என்னும் பெயருடைய யாகம் ஒன்றைச் செய்யத் தொடங்கினார்கள். அப்போது, சூதபௌராணிகர் அந்த யாகத்தை பார்க்க விரும்பம் தெரிவித்து அங்கு வருகிறார். அதைக் கண்ட முனிவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். அவரை வரவேற்று, வணங்கி, ஆசனத்தில் வீற்றிருக்குச் செய்கிறார்கள்.

“சூதக முனிவரே! மாகனுபாவரே! சகல தருமங்களையும் உணர்ந்தவரே! தக்ஷிண கைலாசம் உத்தர கைலாசம் என்னும் இரண்டும் எல்லா மோட்சங்களையும் அளிக்கும் என்று கூறி உள்ளீர்கள். அவ்விரண்டின் தோற்றத்தினையும் வைபவத்தையும் கூறுங்கள்” என்று முனிவர்கள் கேட்கிறார்கள்.

“அன்புடன் கேளுங்கள்! இரு கைலாசங்களின் வரலாறும் மகிமையும் முற்காலத்தில் பக்திமானகளும் தலைவராகிய திருநந்தி தேவருக்கு சிவபெருமான் அருளினார். அந்த நந்திதேவர், அதை சனற்குமாரருக்கு உபதேசம் செய்தார். சனற்குமாரர், அதை வியாசருக்கு கூறினார். வியாசர் அதை அன்புடன் எனக்குக் கூறினார். நான் அதை உங்களுக்கு கூறுகிறேன்.
புராணங்கள் பதினெட்டு. அவை, பிரமம், பதுமம், வைணவம், சைவம், பாகவதம், பவிஷியம், நாரதீயம், மார்கண்டேயம், ஆக்கினேயம், பிரமகைவர்த்தகம், லிங்கம், வராகம், காந்தம், வாமனம், கூர்மம், மற்சம், காருடம், பிரமாண்டம் ஆகியன. இதில்--
பிரமமும், பதுமமும், பிரமபுராணம்.
ஆக்கினியம் அக்கினி புராணம்.
பிரமகைவர்த்தம் சூரிய புராணம்.
நாரதீயம், பாகவதம், காருடம், வைணவம் என்னும் நான்கும் விஷ்ணு புராணங்கள்.
சைவம், பவிஷியம், மற்சம், லிங்கம், கூர்மம், வாமனம், மார்க்கண்டேயம், பிரமாண்டம், காந்தம், வராகம் எனும் பத்தும் சைவ புராணங்கள்.

இதேபோல உப-புராணங்களும் பதினெட்டு. அவை –
வாமனம், சன்ற்குமாரம், தௌர்வாசம், நாரசிங்கம், சிவதருமம், பவிஷியம், நாரதீயம், காபிலம், காந்தம், பிரமாண்டம், காளீகம், ஆமகேசம், சௌமியம், பார்க்கவம், சௌரம், பாராசரம், மாரீசம், வாருணம் என பதினெட்டு.
இந்த 18 உப-புராணங்களையும், முனிவர்கள், மக்களின் உலக நன்மைக்காக அருளினர்.

அங்கம், வங்கம், கலிங்கம், காம்போசம் முதலிய 56 தேசங்கள் உள்ளன. எந்த தேசத்தில் கல்வி அபிவிருத்தி இல்லையோ, எந்த தேசத்தில் பொருள்வரவு இல்லையோ, எந்த தேசத்தில் ஆன்ம சுகம் இல்லையோ, அப்படிப்பட்ட தேசத்தில் ஒருநாளேனும் வசிக்கக் கூடாது. இடையூறு செய்யும் பந்துக்களையும், கோடூரமான முகத்தை உடைய மனையாளையும், ஞானமில்லாத குருவையும், நீக்குதல் வேண்டும். அவ்வாறே கருணையற்ற தேசத்தையும் நீக்குதல் வேண்டும்.

இதன்பாதிப்பால், தேசாந்தரம் செல்வோரும், தீவாந்தரம் செல்வோரும், தீர்த்த யாத்திரை செல்வோரும் புண்ணியசாலிகள் ஆவர். தவமும், மரணமும், வாசமும், புண்ணிய தேசத்தில் விசேஷம் அடையும்.

மேரு மலையானது, பூமிக்கு நடுவில் இருக்கின்றது. சேது முதல் கைசாலம் வரை உள்ள இடம் கர்மபூமி என்று அறிந்து கொள்க. இதன் அகலம் ஒன்பதினாயிரம் யோசனை ஆகும். அதன் நீளம் நூறாயிரம் யோசனை ஆகும். மேருவுக்கு தென்பாகத்தில் சேதுவுக்கும் இமயத்துக்கும் நடுவில் காமாசலம் வரை உள்ள இடமே பாரத தேசம் எனப்படும். முன்னர், பாரத தேசம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

அரசன் நீதியில், அரசன், உலக பரிபாலனத்துக்காக ஆறில் ஒரு பாகம் திறை வாங்கினால் அவன் துர்ப்புத்தி உடையோன் ஆவான். அந்த அரசன், அவன் புத்திரன் முதலியோருடன் பிரமகற்பம் வரையில் நரகத்தையே அனுபவிப்பான். பத்தில் ஒரு பாகம் திறை வாங்கும் அரசனே நல்ல அரசன். கன்னியரை விற்கும் மூர்க்கர்கள், மகாபாதம் செய்தவர் ஆவர். அவர்கள் இவ்வுலகம் உள்ளவரை கோரமான நரகத்தில் மூழ்குவார்கள்.

கடனாலும், பூமியை அபகரித்துக் கொள்வதாலும், புத்திரி, பசு இவர்களை விற்பதாலும், வீண் வைரத்தாலும், வாக்கு தோஷத்தாலும், உண்டாகும் ஐந்து வகையான பாவங்களினாலும் குலநாசம் ஆகும்.

அயோத்தி, மதுரை, அவந்தி, மாயை, காஞ்சி, துவாரகை, தக்ஷிணகைலாசம் என்னும் இவ்வெட்டு தலங்களும் இவ்வுலகத்தில் உள்ள மக்களுக்கு மோட்சமளிக்கும். குமரி என்னும் பெரிய கண்டமானது கர்மபூமி எனப்படும். இதில் ஆயிரத்து எட்டு சிவதலங்களும், நூற்றி எட்டு விஷ்ணுதலங்களும் இருக்கின்றன. இதில் 18 சிவ சேத்திரங்கள் இவ்வுலகில் முக்கியமானவை.

(நன்றி: சி.நாகலிங்கம் பிள்ளையின் தக்ஷிண கைலாச புராணம் நூலிலிருந்து)



கௌபீனம்

கௌபீனம்

சிவபெருமான், ஒரு சிவபக்தனைச் சோதித்த கதை. கோவணத்தை வைத்தே அவருக்கு சோதனை வைக்கிறார். சிவபெருமான், ஒரு முனிவர் போல வேடமணிந்து வருகிறார். பொதுவாக முனிவர்களிடம் இருக்கும் சொத்தே கௌபீணம் (கோவணம்) மட்டுமே! அந்த முனிவர் கையில் ஒரு கோவணத்துடன் வந்து, ஒரு சிவபக்தனான, அமர்நீதி நாயனார் என்பவரை வந்து பார்க்கிறார். முனிவர், “நான் வெளியூர் போகிறேன். அதுவரை என் கோவணத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள். நான் ஊரிலிருந்து திரும்பி வந்தவுடன் வந்து வாங்கிக் கொள்கிறேன். இது ஒன்றுதான் என்னிடம் உள்ளது. அதை பத்திரமாகப் பாதுகாக்கவும்” என்று கூறுகிறார். சிவ பக்தன், முனிவனின் சொல்லைத் தட்டாமல், அதை பாதுகாத்து வருகிறார்.

ஆனாலும், அந்த கோவணம் எப்படியோ காணமல் போய்விடுகிறது. இதற்கிடையில், ஊருக்குப் போன முனிவரும் வந்துவிடுகிறார். அவரின் கோவணத்தை கேட்கிறார். சிவபக்தன் அமர்நீதி நாயனார் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“முனிவரே! உங்களின் கோவணம் காணாமல் போய்விட்டது. மன்னித்து விடுங்கள். அதற்குப் பதிலாக நீர் என்ன கேட்டாலும் நான் தருகிறேன்” என்று கெஞ்சுகிறார்.
முனிவரோ, “சிவபக்தா! என்னிடம் இன்னொரு கோவணம் இருக்கிறது. அதன் எடைக்கு ஏதாவது பொருள் கொடு” என்று கேட்கிறார்.
சிவபக்தனும் சரி என்று முனிவரின் கோவணத்தை ஒரு தராசில் வைத்து, அதற்கு இணையான பொருள்களை எல்லாம் வைக்கிறார். தராசு எடை காட்ட மறுக்கிறது. கோவணம் என்ன அவ்வளவு எடை அதிகமாகவா இருக்கும்? ஆச்சரியம்.

வேறு வழியின்றி, அவர் வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் அந்த தராசில் வைக்கிறார். போதுமானதாக இல்லை. வேறு வழியின்றி, தான் ஏறி உட்காருகிறார். தன் மனை மக்களை எல்லாம் ஏறி உட்காரச் சொல்கிறார். ஒரு வழியாக தராசு சமன் நிலைக்கு வருகிறது.

அதன்படி, இப்போது மொத்த பொருள்களும், இவரும், அவர் மனைவி மக்கள் அனைவரும் இனி முனிவருக்கே சொந்தம்!
ஒப்புக்கொள்கிறார் சிவபக்தன்.

அவரின் சிவபக்தியையும் நேர்மையையும் மெச்சி, சிவன் தன் பாதங்களில் சேர்த்துக் கொள்கிறார்.
**


அண்டமாய் அவனி ஆகி...

அண்டமாய் அவனி யாகி
அறியொணாப் பொருளதாகித்
தொண்டர்கள் குருவுமாகித்
துகளறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற
என்னருள் ஈசனான
திண்திறல் சரவணத்தான்
தினமுமென் சிரசைக் காக்க.
(சண்முக கவசம்)


Sunday, May 1, 2016

நரகங்கள் 28:

நரகங்கள் 28:
நரகம் = பாபலோகம்;

1. தமம்,
2. அந்தமம்,
3. ரௌரவம்
4. மகாரௌரவம்
5. கும்பிபாகம்
6. காலசூத்திரம்
7. அசிபத்திரவனம்
8. கிருமிபக்ஷணம்,
9. அந்தகூபம்
10. சந்தஞ்சம்
11. சன்மலி
12. சூர்மி
13. வைதரணி
14. பிராணரோதம்
15. வைசசம்
16. லாலாபக்ஷணம்
17. வீசி
18. சாரபக்ஷணம்
19. வச்சிரகண்டம்
20. காரம்
21. பிசிதபக்ஷணம்
22. சூலப்பிராந்தம்
23. விதோதகம்
24. தந்தசூகம்
25. பரியாவருத்தம்,
26. திரோதானம்
27. சூசிமுகம்
28. பீடனம்.
**