Thursday, June 2, 2016

நவராத்திரி

நவராத்திரி

இந்த நவராத்திரி பூஜைகளைச் செய்தால், ஒருவர் தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாமாம்.

இந்த நவராத்திரி, ஆஸ்வயுஜ மாதத்தில் (ஐப்பசி மாதத்தில்) சுக்கில பிரதமை முதல் ஒன்பது ராத்திரிகள்தான் நவராத்திரி ஆகும்.

கிருத யுகத்தில் ஒரு அரசன் இருந்தான்; அவன் பெயர் சுகேதன்; அவன் தன் இராஜ்ஜியத்தை இழந்தான்; மனைவியை கூட்டிக் கொண்டு காட்டுக்குப் போகும்படி ஆகி விட்டது; காட்டில் வாழ்கிறான்;

அந்தக் காட்டில், ஒரு முனிவர் இருக்கிறார்; அவர் பெயர் ஆங்கிரசன்; அவரை, இந்த மன்னன் சென்று பார்க்கிறான்; அந்த ரிஷி, இந்த மன்னனுக்கு, ஒரு பூஜைமுறையைச் சொல்லிக் கொடுக்கிறார்; அதைச் செய்தால், நீ இழந்தவற்றை எல்லாம் திரும்பப் பெறலாம் என்றும் சொல்கிறார்;

அதுவே நவராத்திரி பூஜை; அதை செய்துவருகிறான்; இழந்த நாடு நகரங்களை எல்லாம் திரும்பப் பெற்றான்;

நாட்டுக்கு வந்தபின்னரும் அந்த பூஜையைத் தொடர்ந்து செய்து வந்தான்; அது முதல், எல்லோரும் இந்த பூஜையைச் செய்ய ஆரம்பித்தனராம்;

துர்க்கை, லக்ஷூமி, சரஸ்வதி இம்மூவரையும் முறையே ஒவ்வொருவருக்கும் மூன்று நாட்கள் வீதம் ஒன்பது நாட்கள் பூசித்து வர வேண்டுமாம்; ஒன்பாதம் நாள் ஆயுதங்களையும் புத்தகங்களையும் வைத்து ஆராதித்து வருவர்;

மறுநாள் பத்தாம் நாளே தசமி திதி; இதையே விஜய தசமி என்பர்; வெற்றி கிடைக்கும் நாள்!



No comments:

Post a Comment