Showing posts with label அழித்து பிறக்க ஒட்டா. Show all posts
Showing posts with label அழித்து பிறக்க ஒட்டா. Show all posts

Sunday, January 11, 2015

அழித்து பிறக்க ஒட்டா..

அழித்துப் பிறக்கவொட் டாவயில் வேலன் கவியையன்பா
லெழுத்துப் பிழையறக் கற்கின் றிலீரேரி ழண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்கு வெங்கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)

அழித்து பிறக்க ஒட்டா, அயில் வேலன் (கூரான வேல்), கவியை, அன்பால், எழுத்துப்பிழையற, கற்கின்றிலீர் (கற்க தெரியாவிட்டால்), ஏரி மூண்டதென்ன (தீமுண்டது போல்), விழித்து, புகை எழ, பொங்கு, வெம் கூற்றன் (யமன்), விடும் கயிற்றால், கழுத்தில் சுருக்கு இட்டு, இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே.

(சுப்பிரமணியக் கடவுளின் புகழைப் பாடுவோர்க்கு இந்த எம வேதனை இல்லை).