Showing posts with label உமையாள் பயந்த இலஞ்சியமே. Show all posts
Showing posts with label உமையாள் பயந்த இலஞ்சியமே. Show all posts

Sunday, January 25, 2015

உமையாள் பயந்த இலஞ்சியமே!

மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணப்போற்கைதா னிருப துடையான் றலைபத்துங் கத்தரிக்கவெய்தான் மருக னுமையாள் பயந்த விலஞ்சியமே.(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)

*
மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன்;
(நெருக்கமான பூமாலையை கொண்டு அலங்கரித்த கூந்தலையுடைய வள்ளியை மணம் புரிந்தவரே);

முத்தமிழால் வைதாரையும் இங்கு வாழ வைப்போன்;
(இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழிலாலும் தம்மைத் திட்டியவரையும் வாழ வைப்பவனே);

வெய்ய வாரணம்போல் கைதான் இருபது உடையான்  தலை பத்தும் கத்தரிக்க எய்தான் மருக;
(கொடிய யானையைப் போல, கைகள் இருபதும், தலை பத்தும் உடைய ராவணனின் தலையைக் கொய்த விஷ்ணுவின் மருமகனே);

உமையாள் பயந்த இலஞ்சியமே;
(உமை என்னும் உமா தேவி ஈன்றருளிய மகிழம்பூ போன்ற இனியவனே);