மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணப்போற்கைதா னிருப துடையான் றலைபத்துங் கத்தரிக்கவெய்தான் மருக னுமையாள் பயந்த விலஞ்சியமே.(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)
*
மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன்;
(நெருக்கமான பூமாலையை கொண்டு அலங்கரித்த கூந்தலையுடைய வள்ளியை
மணம் புரிந்தவரே);
முத்தமிழால் வைதாரையும் இங்கு வாழ வைப்போன்;
(இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழிலாலும் தம்மைத் திட்டியவரையும்
வாழ வைப்பவனே);
வெய்ய வாரணம்போல் கைதான் இருபது உடையான்
தலை பத்தும் கத்தரிக்க எய்தான் மருக;
(கொடிய யானையைப் போல,
கைகள் இருபதும், தலை பத்தும் உடைய ராவணனின் தலையைக்
கொய்த விஷ்ணுவின் மருமகனே);
உமையாள் பயந்த இலஞ்சியமே;
(உமை என்னும் உமா தேவி ஈன்றருளிய
மகிழம்பூ போன்ற இனியவனே);
No comments:
Post a Comment