Sunday, January 11, 2015

கடல் அழ, குன்று அழ,

திருந்தப் புவனங்க ளீன்றபொற் பாவை திருமுலைப்பா
லருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றேதுங் குவலயமே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்).

திருந்த, புவனங்கள் ஈன்ற, பொற்பாவை (உமாதேவி), திருமுலைப்பால் அருந்தி, சரவணப் பூந்தொட்டில் ஏறி, அறுவர் கொங்கை விரும்பி (ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி), கடல் அழ, குன்று அழ, சூரன் அழ, விம்மி அழுத குருந்தை (குழந்தை) குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே!

No comments:

Post a Comment