சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் துளைத்தவைவேன்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம்பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)
சொன்ன (பொன்),
கிரௌஞ்ச கிரி (கிரௌஞ்ச மலை), ஊடுருவத் துளைத்த,
வைவேன் மன்ன (கூரிய வேலை மன்னா), கடம்பின்
மலர்மாலை மார்ப (கடம்பப்பூ மலை அணிந்த மார்பை உடையவனே), மௌனத்தை
உற்று (மௌனத்துடன்), நின்னை உணர்ந்து, எல்லாம்
ஒருங்கிய, நிர்க்குணம் பூண்டு (குணம் கடந்த நிலையை அடைந்து),
என்னை மறந்திருந்தேன், இறந்தே விட்டது இவ்
வுடம்பு.
No comments:
Post a Comment