Tuesday, January 6, 2015

மாரி மழைமுழைஞ்சில்

மாரி மழைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்|

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து|

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி|

மூரி நிமிர்ந்து  முழங்கிப் புறப்பட்டுப்|

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்|

கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய|

சீரய சிங்கா சனத்திருந்து யாம்வந்த|

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

(திருப்பாவை-23)

No comments:

Post a Comment