Sunday, January 11, 2015

கிரௌஞ்சம் குலைந்தது...

தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்ததுசூர்ப்
பேரணி கேட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)


தேர் அணி இட்டுப் புரம் எரித்தவன் மகன், செங்கையில் வேல் கூர் அணியிட்டு, கிரௌஞ்சம் (கிரௌஞ்ச மலை) அணுவாகி (பொடியாகி), அரக்கர் நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது, சூர்பேர் அணி (சூரன் படை) அழிந்தது, தேவேந்திரலோகம் பிழைத்தது.

No comments:

Post a Comment