அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி|
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி|
பொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ்போற்றி|
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி|
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி|
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி|
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்|
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
திருப்பாவை-24
(ஆண்டாள் பாடியது)
No comments:
Post a Comment