Wednesday, January 14, 2015

மூவடி கேட்ட அன்று...

தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபான்
மூவடி கேட்டன்று முதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

Picture courtesy: Google
தாவடி ஒடும் மயிலினும் (தாவி ஓடும் மயிலின் மீதும்), தேவர் தலையிலும், என் பா அடி ஏட்டிலும், பட்டது அன்றோபடி (மண்), மாவலிபான் (மாவலி மன்னன்), மூவடி கேட்ட அன்று (மூன்று அடி மண் கேட்ட அன்று), மூது அண்ட கூட (அண்டமே மூடி முகடு முட்டும்படி), சேவடி (திருவடிகளை) நீட்டும் பெருமான், மருகன் (மருமகன்), தன் சிற்றடியே. 

No comments:

Post a Comment