கோழிக்கொடிய னடிபணி யாமற் குவலயத்தேவாழக் கருதும் மதியிலி யுண்ணவொட்டா துங்க ளத்தமெல்லாமாழப் புதைத்துவைத் தால்வரு மோநும் மடிப்பிறகே.--அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்
கோழிக் கொடியன் அடி பணியாமல், குவலயத்தே வாழக் கருதும்
மதியிலிகாள்;
(கோழிக் கொடியை உடைய
முருகக்கடவுளின் அடியைப் பணியாமல் வாழ நினைக்கும் மதியில்லாதவர்களே!)
உண்ண ஒட்டாது உங்கள் அத்தம் எல்லாம்;
(உங்கள் ஊழ்வினை, உங்களின் செல்வங்களை அனுபவிக்க விடாது);
ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகே;
(ஆழமாகப் புதைத்து வைத்தாலும் உமக்கு அதுகிடைக்காது);
No comments:
Post a Comment