Sunday, January 11, 2015

அம்புலியின் கீற்றை...


பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப் ரபஞ்சமென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வாசெஞ் சடாடவிமை
லாற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப்புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)

பேற்றை, தவம் சற்றும் இலாத, என்னை, பிரபஞ்சம் என்னும் சேற்றை, கழிய விட்டவாரேசெம்-சடா அடவிமேல், ஆற்றை, பணியை இதழியை தும்பையை, அம்புலியின் கீற்றை (நிலவொளியை), புனைந்த பெருமானின் குமாரன், கிருபாகரனே! (சுப்பிரமணியக் கடவுளே).

No comments:

Post a Comment