Saturday, January 10, 2015

ஏறுமயிலேறி விளையாடு முகமொன்றே!

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்விணை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடி சூரரைவ தைத்தமுக மொன்றே
வள்ளியை மணப்புணர வந்தமுக மொன்றே
ஆறுமகு மானபொரு ணீயருளல் வேண்டும்
ஆதி யருணாசல மமர்ந்த பெருமாளே.


(அருணகிரிநாதர், திருவண்ணாமலையில் சுப்பிரமணிய கடவுளைத் துதித்து முதன் முதலில் பாடியது. இவர்தான் தன் ஆன்மாவை தனது உடலைவிட்டு நீக்கி, ஒரு கிளியின் உடலில் புகுந்து, திருச்செந்தூர் சென்று சுப்பிரமணிய கடவுளை வழிபட்டு திரும்பியபோது, தன் உடலைக்காணது, கிளி உடலிலேயே இருந்தவர்.)


No comments:

Post a Comment