Showing posts with label கோழிக்கொடியன். Show all posts
Showing posts with label கோழிக்கொடியன். Show all posts

Sunday, January 25, 2015

கோழிக் கொடியன்

கோழிக்கொடிய னடிபணி யாமற் குவலயத்தேவாழக் கருதும் மதியிலி யுண்ணவொட்டா துங்க ளத்தமெல்லாமாழப் புதைத்துவைத் தால்வரு மோநும் மடிப்பிறகே.
--அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்

கோழிக் கொடியன் அடி பணியாமல், குவலயத்தே வாழக் கருதும் மதியிலிகாள்;
(கோழிக் கொடியை உடைய  முருகக்கடவுளின் அடியைப் பணியாமல் வாழ நினைக்கும் மதியில்லாதவர்களே!)

உண்ண ஒட்டாது உங்கள் அத்தம் எல்லாம்;
(உங்கள் ஊழ்வினை, உங்களின் செல்வங்களை அனுபவிக்க விடாது);

ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகே;
(ஆழமாகப் புதைத்து வைத்தாலும் உமக்கு  அதுகிடைக்காது);