Showing posts with label கவிகாளமேகம். Show all posts
Showing posts with label கவிகாளமேகம். Show all posts

Tuesday, February 9, 2016

குமார கோட்டக் கீரை

காளமேகப்புலவரின் கவி-3

கவி காளமேகம், ஏகாம்பரநாதரை தரிசிக்கச் செல்கிறார்; அங்குள்ள சிவப் பிராமணர்கள், இவரை அலட்சியமாக எண்ணி, இவரின் கவிபாடும் திறமையை சோதிக்க நினைத்து, இந்த தலத்தில் ஆறு அற்புதங்கள் இருக்கின்றன; அவை எவை எவை என்று கேட்கிறார்கள்;
இவரோ, அவை, குமரகோட்டக்கீரை, செவிலிமேட்டுப் பாகற்காய், பருத்திக்குளநீர், செப்பு வாசற் காற்று, கம்பதடியில் தவம், கருமாறிப் பாய்ச்சல் என்று கவியில் கூறுகிறார்;

"அப்பா குமார கோட்டக் கீரை செவிலிமேட் 
டுப்பாகற் காய் பருத்திக் குளநீர் -- செப்புவா 
சற்காற்றுக் கம்பத்தடியிற் றவங்கருமா 
றிப்பாய்ச்சல் யார்க்கு மினிது."
**

காளமேகப் புலவரின் கவி-2

 காளமேகப் புலவரின் கவி-2
காஞ்சீபுரத்தில் வரதராஜப் பெருமாள் தரிசனம் தருகிறார்; வைகாசி மாதத்தில், வரதராஜப் பெருமாளுக்கு கருட உற்வசம் நடக்கும்; தங்கத்தில் உள்ள கருடன் வாகனத்தில், அழகிய பெருமாள் அமர்ந்து திவ்விய மங்கள விக்கிர லட்சணங்களுடன் பவனி வருவார்; இந்த வைபவத்தை வியந்து, கவி காளமேகம் இந்த வெண்பாவைப் பாடுகிறார்;

"பெருமாளு நல்ல பெருமாள் 
அவர்தம்திருநாளு நல்ல திருநாள் -- பெருமாள் 
இருந்திடத்திற் சும்மா விராமனையினாலையோ 
பருந்தெடுத்துப் போகிறதே பார்."

எப்போதும், பெருமாள் குதிரையின் மீது அமர்ந்து பரிவேட்டைக்கு போகும் உற்சவம் இருக்கும்; இப்படி போகும்போது, பரமாத்மா, ஜீவாத்மா இவருக்கும் உள்ள சம்மந்தத்தை உலகுக்கு உரைப்பார்; அப்படிப்பட்ட பெருமாளை, ஒரு பருந்து தூக்கிச் செல்கிறதே என்று வேடிக்கையாகப் பாடுகிறார்;

**