Tuesday, February 9, 2016

குமார கோட்டக் கீரை

காளமேகப்புலவரின் கவி-3

கவி காளமேகம், ஏகாம்பரநாதரை தரிசிக்கச் செல்கிறார்; அங்குள்ள சிவப் பிராமணர்கள், இவரை அலட்சியமாக எண்ணி, இவரின் கவிபாடும் திறமையை சோதிக்க நினைத்து, இந்த தலத்தில் ஆறு அற்புதங்கள் இருக்கின்றன; அவை எவை எவை என்று கேட்கிறார்கள்;
இவரோ, அவை, குமரகோட்டக்கீரை, செவிலிமேட்டுப் பாகற்காய், பருத்திக்குளநீர், செப்பு வாசற் காற்று, கம்பதடியில் தவம், கருமாறிப் பாய்ச்சல் என்று கவியில் கூறுகிறார்;

"அப்பா குமார கோட்டக் கீரை செவிலிமேட் 
டுப்பாகற் காய் பருத்திக் குளநீர் -- செப்புவா 
சற்காற்றுக் கம்பத்தடியிற் றவங்கருமா 
றிப்பாய்ச்சல் யார்க்கு மினிது."
**

No comments:

Post a Comment