காளமேகப்புலவரின் கவி-3
கவி காளமேகம், ஏகாம்பரநாதரை தரிசிக்கச் செல்கிறார்; அங்குள்ள சிவப்
பிராமணர்கள், இவரை அலட்சியமாக எண்ணி, இவரின்
கவிபாடும் திறமையை சோதிக்க நினைத்து, இந்த தலத்தில் ஆறு அற்புதங்கள்
இருக்கின்றன; அவை எவை எவை என்று கேட்கிறார்கள்;
இவரோ, அவை, குமரகோட்டக்கீரை, செவிலிமேட்டுப்
பாகற்காய், பருத்திக்குளநீர், செப்பு வாசற்
காற்று, கம்பதடியில் தவம், கருமாறிப் பாய்ச்சல்
என்று கவியில் கூறுகிறார்;
"அப்பா குமார கோட்டக் கீரை செவிலிமேட்
டுப்பாகற் காய் பருத்திக் குளநீர் -- செப்புவா
சற்காற்றுக் கம்பத்தடியிற் றவங்கருமா
றிப்பாய்ச்சல் யார்க்கு மினிது."**
No comments:
Post a Comment