கந்தரலங்காரம்-26
நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும்
கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே
காலத்தை வென்று இருப்பார் மரிப்பார் வெறும் கர்மிகளே.
(நீலநிறச் சிகண்டியில் (மயிலில்) ஏறும் பிரானே!
எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் (அழகிய குறத்தியான வள்ளியுடன்) வருவான்
குருநாதன்; அவன்
சொன்ன சீலத்தை (மெஞ்ஞானத்தை) மெல்ல அறிந்து தெளிந்து, அறியக்கூடியவர்கள்
சிவயோகிகளே! காலத்தை வென்று (காலம் கடந்தும்) இருப்பார்கள், ஆனால்
வெறும் கர்மிகள் காலத்திலேயே இறந்து போவார்கள்;) அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல் 26.
நீலச்சிகண்டியிலேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக்குறத்தியுடன் வருவான் குருநாதன்சொன்ன
சீலத்தைமெள்ளத் தெளிந்தறிவார் சிவயோகிகளே
காலத்தைவென் றிப்பார்மரிப் பார்வெறுங்கர்மிகளே.
(கந்தரலங்காரம்-26)
No comments:
Post a Comment