Monday, February 29, 2016

கந்தரலங்காரம்-40

கந்தரலங்காரம்-40

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.

(சேல் என்னும் மீன்கள் துள்ளித் திரிந்ததால், செந்தூர் வயல் பொழில்கள் அழிந்தன; தேன் கடம்ப மரத்தின் மலர்கள் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனங்கள்; மா மயில் வாகனனின் வேலாயுதம் பட்டு அழிந்தது வேல் என்னும் கடலும் சூரனும் வெற்பு என்னும் மலையும்; அவனின் கால் என்னும் திருவடிகள் என் தலைமீது பட்டு அழிந்தது, அயன் என்னும் பிரம்மன் எனக்கு எழுதிய என் தலையெழுத்து;)

சேல்பட்டழிந்தது செந்தூர்வயப்பொழிறேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனமாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையுஞ்சூரனும் வெற்புமவன்
கால்பட்டழிந்த திங்கென்றலை மேலயன்கையெழுத்தே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 40)

No comments:

Post a Comment