Saturday, February 27, 2016

கந்தரலங்காரம்-18

கந்தரலங்காரம்-18

வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்கென்று
நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள் உங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவாத உடம்பின் வெறுநிழல் போல்
கையிற் பொருளும் உதவாது காண் உன் கடைவழிக்கே.

(வைரக் கதிர் வீசும் வடிவேலோனை வாழ்த்தி, வறியவர்களான ஏழைகளுக்கு, ஒரு நொய் அரிசியில் ஒரு சிறு பிளவு அரிசியையாவது பகிர்ந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு, இங்கு, வெய்யிலில் ஒதுங்க உங்களின் உடம்பின் நிழல் உதவாது; அதுபோல, உங்கள் கையில் பொருள் இருந்தாலும், அது கடைசி காலத்துக்கு உங்களுக்கு உதவாது போய்விடும், காண்பீராக!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-18

வையிற்கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்கென்று
நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கணுங் கட்கிங்ஙன்
வெய்யிற்கொதுங்க வுதவாவுடம்பின் வெறுநிழல்போற்
கையிற்பொருளு முதவாதுகாணுங் கடைவழிக்கே.
கந்தரலங்காரம்-18


No comments:

Post a Comment