Sunday, February 28, 2016

கந்தரலங்காரம்-24

கந்தரலங்காரம்-24

கின்னம் குறித்து அடியேன் செவி நீ அன்று கேட்கச்  சொன்ன
குன்னங்குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல்
சின்னம் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னம் குறிச்சியிற் சென்று கல்யாண முயன்றவனே.

(கின்னம் என்னும் துன்பத்தைப் பற்றி அடியேனுக்கு காதில், நீ, அன்று கேட்கச் சொன்ன குன்னம் குறிச்சி (இரகசியம்) என்னை தெளிவாக்கி விட்டது; கோடு, குழல் போன்ற சின்னங்கள் ஒலிக்க, குறிஞ்சி நில கிழவரின் சிறுமியை (வள்ளியை) குறிச்சி என்ற இடத்தில் கல்யாணம் செய்ய முயன்றவனே!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 24.

கின்னங்குறித் தடியேன்செவி நீயன்றுகேட்கச் சொன்ன
குன்னங்குறிச்சி வெளியாக்கிவிட்டது கோடுகுழல்
சின்னங்குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங்குறிச்சியிற் சென்று கல்யாண முயன்றவனே.
(கந்தரலங்காரம்-24)


No comments:

Post a Comment