Monday, February 29, 2016

கந்தரலங்காரம்-36

கந்தரலங்காரம்-36

சுழித்து ஓடும் ஆற்றின் பெருக்கானது செல்வம் துன்பம் இன்பம்
கழித்தோடுகின்றது எக்காலம் நெஞ்சே கரிக்கோட்டு முத்தைக்
கொழித்து ஓடும் காவிரிச் செங்கோடன் என்கிலை குன்றம் எட்டுங்
கிழித்தோடு வேல் என்கிலை எங்ஙனே முத்தி கிட்டுவதே.

(சுழித்துக் கொண்டு ஓடும் ஆற்றின் பெருக்குப்போல, செல்வமானது, துன்பம், இன்பம், இல்லாமல் ஓடுவது எக்காலம் நெஞ்சே? கரிகோட்டு முத்தை கொழித்துக் கொண்டு ஓடும் காவிரியின் செங்கோடனை (திருச்செங்கோட்டில் இருப்பவனை) நினைக்கவில்லை; எட்டுக் குன்றமும் (மலைகளும்) கிழித்துக் கொண்டு செல்லும் வேலை (வேல் ஆயுதத்தை) நினைக்கவில்லை; அப்படி இருக்கும்போது, எப்படி முக்தி கிடைக்கும்?) அருணகிரிநாதர் அருளிய கந்தரங்காரப் பாடல் 36

சுழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந்துன்பமின்பங்
கழித்தோடுகின்ற தெக்கால நெஞ்சேகரிக்கோட்டு முத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோடனென்கிலை குன்றமெட்டுங்
கிழித்தோடு வேலென்கிலையெங்ஙனே முத்தி கிட்டுவதே.
(கந்தரலங்காரம்-36)


No comments:

Post a Comment