Sunday, February 28, 2016

கந்தரலங்காரம்-33

கந்தரலங்காரம்-33

முடியாப் பிறவிக் கடலிற் புகார் முழுதுங் கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார் வெற்றிவேற் பெருமா
னடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமான் திருநாமம் புகழ்பவரே.

(முடிவில்லாத பிறவிக் கடலில் மூழ்க மாட்டார்; முழுவதும் கெடுக்கும் வறுமைப் பிணியில் கவலைப் படார்; வெற்றிவேலை வைத்திருக்கிற பெருமானின் அடியவர்களுக்கு நல்ல பெருமாள்; அவுணர் என்னும் அசுரர் குலம் அடங்க அவர்களை பொடியாக்கிய பெருமானே! உன் திருநாமத்தை புகழ்பவரே (பிறவிக் கடலில் புக மாட்டார்); அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரப் பாடல் 33.

முடியாப்பிறவிக் கடலிற்புகார் முழுதுங்கெடுக்கு
மிடியாற்படியில் விதனப்படார் வெற்றிவேற்பெருமா
னடியார்க்குநல்ல பெருமாளவுணர் குலமடங்கப்
பொடியாக்கிய பெருமாடிருநாமம் புகழ்பவரே.
கந்தரலங்காரம்-33


No comments:

Post a Comment