கந்தரலங்காரம்-33
முடியாப் பிறவிக்
கடலிற் புகார் முழுதுங் கெடுக்கு
மிடியாற் படியில்
விதனப் படார் வெற்றிவேற் பெருமா
னடியார்க்கு நல்ல
பெருமாள் அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமான்
திருநாமம் புகழ்பவரே.
(முடிவில்லாத பிறவிக்
கடலில் மூழ்க மாட்டார்; முழுவதும் கெடுக்கும் வறுமைப் பிணியில் கவலைப் படார்; வெற்றிவேலை வைத்திருக்கிற பெருமானின்
அடியவர்களுக்கு நல்ல பெருமாள்; அவுணர் என்னும் அசுரர் குலம்
அடங்க அவர்களை பொடியாக்கிய பெருமானே! உன் திருநாமத்தை புகழ்பவரே (பிறவிக் கடலில்
புக மாட்டார்); அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரப் பாடல்
33.
முடியாப்பிறவிக்
கடலிற்புகார் முழுதுங்கெடுக்கு
மிடியாற்படியில்
விதனப்படார் வெற்றிவேற்பெருமா
னடியார்க்குநல்ல
பெருமாளவுணர் குலமடங்கப்
பொடியாக்கிய
பெருமாடிருநாமம் புகழ்பவரே.
கந்தரலங்காரம்-33
No comments:
Post a Comment