திருக்காளத்தி
என்னும் ஸ்ரீகாளகஸ்தி:
திருக்காளத்தியில்
அருளும் ஈஸ்வரனின் பெயர் காளத்தியப்பர்; இதுவே ஸ்ரீகாளகஸ்தி
என்னும் காளாஸ்திரி; சிவன், பஞ்ச
பூதங்களாக இருக்கிறான்; அதில் வாயுவாக இங்கு இருக்கிறான்;
சிவலிங்கத்தின் முன்னால் உள்ள ஒரு விளக்கு எப்போதும் காற்றினால்
அசைந்து கொண்டே இருக்குமாம்;
அங்கு சிவனுடன்
இறைவியாக "ஞானப் பூங்கோதை" அருள்பாலிக்கிறார்;
சீ, காளம் அத்தி என மூன்றும் இங்கு சிவனை வழிபட்டதால்
சீகாளகத்தி என்று பெயர் வந்ததாம்;
(சீ=சிலந்தி; காளம்=பாம்பு; அத்தி=யானை)
இந்த காளகஸ்தி
காற்றுக்கு அடையாள தலமாக உள்ளது;
(நீர் என்னும்
அப்புவாக = திருவாணைக்கா சிவன்)
(நிலம் என்னும்
பிருதிவியாக= திருவாரூர் சிவன்)
(காற்று என்னும்
வாயுவாக = திருக்காளத்தி சிவன்)
(தீ என்னும் தேயுவாக
= திருவண்ணாமலை சிவன்)
(ஆகாசம் என்னும்
வெளியாக = சிதம்பர சிவன்)
**
No comments:
Post a Comment