கந்தரலங்காரம்-34
பொட்டாக வெற்பைப் பொருத கந்தா தப்பிப் போனது ஒன்றற்
கெட்டாத ஞானகலை தருவாய் இருங் காம விடாய்ப்
பட்டார் உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்குங்
கட்டாரி வேல் விழியார் வலைக்கே மனங் கட்டுண்டதே.
(வெடித்துச் சிதறும்படி வெற்பு என்னும் மலையுடன்
மோதிய கந்தா! ஒன்றிற்கும் எட்டாத ஞானக் கலையை தருவாய்! இருங் காமப் பசியில்
பட்டோரின் உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்கும் கட்டாரி வேல் போல விழிகளை உடைய
பெண்களின் வலைக்குள் அகப்பட்டுக் கொண்டு, மனம் கட்டுப்பட்டு விட்டதே!) அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரப் பாடல் 34.
பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞானகலை தருவாயிருங் காமவிடாய்ப்
பட்டாருயிரைத் திருகிப் பருகிப்பசி தணிக்குங்
கட்டாரிவேல் விழியார் வலைக்கே மனங்கட்டுண்டதே.
(கந்தரலங்காரம்-34)
**
No comments:
Post a Comment