கந்தரலங்காரம்-27
ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து
எனக்குக்
காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள்
மருங்கிற்
சேலையுங் கட்டிய சீராவும் கையிற் சிவந்த செச்சை
மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே.
(எமனின் ஓலையையும், தூதரையும் கண்டு திண்டாடும் எனது
திண்டாட்டம் ஒழிந்தது; காலையிலும் மாலையிலும் என் கண் முன்
நிற்கும் கந்தவேள், இடுப்பில் சேலையும், அதில் கட்டிய சீரா என்னும் கூரிய வாளும், கையில்
சிவந்த செச்சை என்னும் வெட்சிப்பூமாலை, சேவல் கொடி, தோகை என்னும் மயில்வாகனம், வாகை என்னும்
வெற்றிமாலைகள், இவைகளுடன் எனக்கு முருகன் காட்சி தருகிறான்;)
அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 27.
ஓலையுந்தூதருங் கண்டு திண்டாட லொழித்தெனக்குக்
காலையுமாலையு முன்னிற்குமே கந்தவேண்மருங்கிற்
சேலையுங் கட்டியசீராவுங்கையிற் சிவந்தசெச்சை
மாலையுஞ்சே வற்பதாகையுந் தோகையும்வாகையுமே.
(கந்தரலங்காரம்-27)
No comments:
Post a Comment