வள்ளலார் வேண்டுதல்
அப்பா நான் வேண்டுதல் கேட்டு
அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான்
அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான்சென்றே
எந்தை நினது அருள் புகழை
இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேற் சுத்தசிவமார்க்கந்
திகழ்ந்தோங்க அருட்பெருஞ்ஜோதி
செலுத்திடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத
நிலைமையும் வேண்டுவனே.
**
No comments:
Post a Comment