Sunday, February 28, 2016

கந்தரலங்காரம்-32

கந்தரலங்காரம்-32

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார்புடன் கிரி ஊடுருவத்
துளைத்துப் புறப்பட்ட வேற் கந்தனே துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்
கிளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து ரட்சிப்பையே.

(பல கிளைகளாக புறப்பட்டு வந்த சூரின் மார்பையும் (சூரபர்மனின் மார்பையும்), மலையையும் ஊடுருவித் துளைத்து புறப்பட்ட வேல் என்னும் வேலாயுத்தை வைத்திருக்கும் கந்தனே! துறந்தோர் என்னும் முனிவர்கள் உள்ளத்தை வளைத்துப் பிடித்து பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்களை உடைய பெண்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கின்ற என்னை, நீ, எந்த நாள் வந்து ரட்சிப்பாய்?) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரப் பாடல் 32.

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார்புடன் கிரியூடுருவத்
துளைத்துப் புறப்பட்டவேற் கந்தனே துறந்தோருளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப்பதைக்க வதைக்குங்கண்ணார்க்
கிளைத்துத் தவிக்கின்றவென்னை யெந்நாள் வந்திரட்சிப்பையே.
(கந்தரலங்காரம்-32)


No comments:

Post a Comment