காளமேகப்புலவரின்
கவி:
திருச்செங்காட்டில், உத்தராபதீஸ்வரரைத் தரிசனம் செய்யச் செல்கிறார் காளமேகப் புலவர்; அங்கு, ஈஸ்வரன் வந்து அந்த காட்டில் ஒளிந்து
கொண்டிருப்பதாகவும், ஏன் இவ்வாறு நாட்டைவிட்டு, காட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறாய் என்ற கேள்வி கேட்கும் தொனியில் இந்தப்
பாடலைப் பாடி இருக்கிறார்:
"காலனையும் காமனையும் காட்டுச் சிறு தொண்டர்தரும்
பாலனையும் கொன்ற பழி போமோ -- சீலமுடன்
நாட்டில் வாழ்திருக்கு நாதரே நீர் திருச்சங்
காட்டிலே வந்திருந்தக்கால்."
ஈஸ்வரனே, நீ இதற்குமுன், காலன் என்னும் யமனையும், காமன் என்னும் மன்மதனையும், சிறுத் தொண்டரின்
பிள்ளையும் கொன்றாய்; நீ, நாட்டில்
மக்கள் இருக்கும் இடத்தில் இல்லாமல், யாருக்கும் தெரியாமல்,
இங்கு செங்காட்டில் வந்து ஒளிந்து கொண்டு வாழ்ந்தால், உன் மீது சுமத்தப்பட்ட இந்த கொலைப்பழிகள் எல்லாம் நீங்கிவிடும் என்று
நினைக்கிறாயா? என்று கேள்வி கேட்டு இந்த வெண்பாவைப் பாடி
இருக்கிறார் காளமேகப்புலவர்;
**
No comments:
Post a Comment