Tuesday, February 9, 2016

காலனையும் காமனையும்...

காளமேகப்புலவரின் கவி:

திருச்செங்காட்டில், உத்தராபதீஸ்வரரைத் தரிசனம் செய்யச் செல்கிறார் காளமேகப் புலவர்; அங்கு, ஈஸ்வரன் வந்து அந்த காட்டில் ஒளிந்து கொண்டிருப்பதாகவும், ஏன் இவ்வாறு நாட்டைவிட்டு, காட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறாய் என்ற கேள்வி கேட்கும் தொனியில் இந்தப் பாடலைப் பாடி இருக்கிறார்:

"காலனையும் காமனையும் காட்டுச் சிறு தொண்டர்தரும் 
பாலனையும் கொன்ற பழி போமோ -- சீலமுடன் 
நாட்டில் வாழ்திருக்கு நாதரே நீர் திருச்சங் 
காட்டிலே வந்திருந்தக்கால்."

ஈஸ்வரனே, நீ இதற்குமுன், காலன் என்னும் யமனையும், காமன் என்னும் மன்மதனையும், சிறுத் தொண்டரின் பிள்ளையும் கொன்றாய்; நீ, நாட்டில் மக்கள் இருக்கும் இடத்தில் இல்லாமல், யாருக்கும் தெரியாமல், இங்கு செங்காட்டில் வந்து ஒளிந்து கொண்டு வாழ்ந்தால், உன் மீது சுமத்தப்பட்ட இந்த கொலைப்பழிகள் எல்லாம் நீங்கிவிடும் என்று நினைக்கிறாயா? என்று கேள்வி கேட்டு இந்த வெண்பாவைப் பாடி இருக்கிறார் காளமேகப்புலவர்;
**


No comments:

Post a Comment