Sunday, February 28, 2016

கந்தரலங்காரம்-23

கந்தரலங்காரம்-23

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்
ஐவர்க்கிடம் பெறக் கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கைவைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே.

(தெய்வீகமான திருமலை செங்கோட்டில் (திருசெங்கோட்டில்) வாழும் செழுமையான சுடரே! கூர்மை வைத்த வேற்படை கொண்ட வானவனே! மறக்க மாட்டேன் உன்னை நான்; ஐந்து புலன்கள் இருப்பதற்காக, இரண்டு கால்கள் உண்டாக்கி, அதில் இரண்டு கைகள் வைத்து, கட்டிய வீடு என்ற இந்த உடம்பு அழிவதற்கு முன்னரே வந்து காத்தருள்வாய்!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-23.

தெய்வத்திருமலைச் செங்கோட்டில்வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்தவேற் படைவானவனே மறவேனுனைநா
னைவர்க்கிடம்பெறக் காலிரண்டோட்டிய திலிரண்டு
கைவைத்தவீடு குலையுமுன்னேவந்து காத்தருளே.

(கந்தரலங்காரம்-23)

No comments:

Post a Comment