நமச்சிவாயத்
திருப்பதிகம்
(திருநாவுக்கரசு
சுவாமிகள் அருளியது)
சொற்றுணை வேதியன்
சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி
பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி
வாயவே.
பூவினுக் கருங்கலம்
பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன்ஆஞ்
சாடுதல்
கோவினுக் கருங்கலங்
கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம்
நமச்சி வாயவே.
விண்ணுற அடுக்கிய
விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை
யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற்
பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது
நமச்சி வாயவே.
இடுக்கண்பட்
டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற்
பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க்
கிடக்கினும் அருளின் நாமுற்ற
நடுக்கத்தைக்
கெடுப்பது நமச்சி வாயவே.
வெந்தநீ றருங்கலம்
விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
அருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந்
திகழ நீண்முடி
நங்களுக் கருங்கலம்
நமச்சி வாயவே.
சலமிலன் சங்கரன்
சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு
வானலன்
குலமில ராகிலுங்
குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
நமச்சி வாயவே.
வீடினார் உலகினில்
விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
கூடிச் சென்றாலும்
ஓடினே னோடிச்சென்
றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
நமச்சி வாயவே.
இல்லக விளக்கது
இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி
யுள்ளது
பல்லக விளக்கது
பலருங் காண்பது
நல்லக விளக்கது
நமச்சி வாயவே.
முன்னேறி யாகிய
முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல்
திண்ணமே
இந்நெறி யேசென்றங்
கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி
வாயவே.
மாப்பிணை தழுவிய
மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
நமச்சி வாயப்பத்து
ஏத்தவல் லார்தமக்
கிடுக்கண் இல்லையே.
**
No comments:
Post a Comment