காளமேகப் புலவரின்
கவி-2
காஞ்சீபுரத்தில் வரதராஜப்
பெருமாள் தரிசனம் தருகிறார்; வைகாசி மாதத்தில்,
வரதராஜப் பெருமாளுக்கு கருட உற்வசம் நடக்கும்; தங்கத்தில் உள்ள கருடன் வாகனத்தில், அழகிய பெருமாள் அமர்ந்து
திவ்விய மங்கள விக்கிர லட்சணங்களுடன் பவனி வருவார்; இந்த வைபவத்தை
வியந்து, கவி காளமேகம் இந்த வெண்பாவைப் பாடுகிறார்;
"பெருமாளு நல்ல பெருமாள்
அவர்தம்திருநாளு நல்ல திருநாள் -- பெருமாள்
இருந்திடத்திற் சும்மா விராமனையினாலையோ
பருந்தெடுத்துப் போகிறதே பார்."
எப்போதும், பெருமாள் குதிரையின் மீது அமர்ந்து பரிவேட்டைக்கு போகும் உற்சவம் இருக்கும்;
இப்படி போகும்போது, பரமாத்மா, ஜீவாத்மா இவருக்கும் உள்ள சம்மந்தத்தை உலகுக்கு உரைப்பார்; அப்படிப்பட்ட பெருமாளை, ஒரு பருந்து தூக்கிச் செல்கிறதே
என்று வேடிக்கையாகப் பாடுகிறார்;
**
No comments:
Post a Comment