இதோபதேசம்-2
கோதாவரி ஆற்றங்கரையில், பரந்த கிளைகளை உடைய ஒரு இலவமரம் நிற்கின்றது;
அம்மரத்திலே பல வகையான பறவைகள் வந்து இரவில் தங்கி, நித்திரை செய்து,
விடியற்காலையில் அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்று விடும்;
அந்தப் பறவைகளில் ஒரு காகமும் ஒன்று: அதன் பெயர் இலகுபதனன்; ஒருநாள் இரவு, அந்த காகம் அந்த இலவமரத்தில் வந்து நித்திரை செய்து விடியற்காலையில் எழுந்திருக்கிறது;
அப்போது அந்த காட்டில் இமயன் போன்று ஒரு வேடன் ஒருவனைப் பார்க்கிறது;
"இன்றைக்கு இவன் முகத்தில் விழித்திருக்கிறோம்; என்ன கெடுதல் நடக்கப் போகிறதோ தெரியவில்லையே என்று கலங்குகிறது; அந்த கலக்கத்துடனேயே அது பறந்து சென்றது;
மூடன் "கவலைப்படுவதற்கு ஆயிரம் விஷயங்கள் உள்ளன என்றும்; அஞ்சுவதற்கு நூற்றுக் கணக்கில் நடக்கின்றன" என்றும் புலம்புவானாம்;
மூடன் "கவலைப்படுவதற்கு ஆயிரம் விஷயங்கள் உள்ளன என்றும்; அஞ்சுவதற்கு நூற்றுக் கணக்கில் நடக்கின்றன" என்றும் புலம்புவானாம்;
வந்த வேடன்,
தன்னிடம் இருந்த அரிசிக்குறுணியை நிலத்திலே சிதறி விட்டான்; அந்த இடத்தில் ஒரு வலையைப் போட்டு வைத்தான்; மரத்துக்கு
மறைவில் நின்று கொண்டான்;
அப்போது ஆகாயத்தில், புறாக்கள் கூட்டமாகப் பறந்து சென்றன; அதில் சில புறாக்கள்
இந்த அரிசிக்குறுணியை பார்த்து விட்டன; அவற்றை தின்பதற்காக,
கீழே இறங்கி வர எத்தனித்தன; இதைக் கண்ட புறாக்களின்
அரசன் (அரச புறா) "இங்கு மக்கள் நடமாட்டமே இல்லாத இடத்தில் அரிசிக்குறுணி எப்படி
வரும்? இதில் ஏதோ சூது இருக்கிறது; நாம்
யாரும் கீழே இறங்கக் கூடாது;" என்று கட்டளை இட்டது:
அதைத் தொடர்ந்து,
அரசு புறா, மற்ற புறாக்களுக்கு, "வழிப்போக்கன் புலியிடம் மாட்டிக் கொண்ட கதையைக்" கூறியது;
அந்த புலிக்கதைதான் இங்கு "இதோபதேசம்-1" என்று கூறப்பட்டுள்ளது;
(விஷ்ணுசர்மா என்னும் பண்டிதரின் இதோபதேசம் என்னும் நீதிக்
கதைகளிலிருந்து ஒரு பகுதி).
**
No comments:
Post a Comment