Saturday, February 13, 2016

இதோபதேசம்-2

இதோபதேசம்-2

கோதாவரி ஆற்றங்கரையில், பரந்த கிளைகளை உடைய ஒரு இலவமரம் நிற்கின்றது; அம்மரத்திலே பல வகையான பறவைகள் வந்து இரவில் தங்கி, நித்திரை செய்து, விடியற்காலையில் அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்று விடும்;

அந்தப் பறவைகளில் ஒரு காகமும் ஒன்று: அதன் பெயர் இலகுபதனன்; ஒருநாள் இரவு, அந்த காகம் அந்த இலவமரத்தில் வந்து நித்திரை செய்து விடியற்காலையில் எழுந்திருக்கிறது; அப்போது அந்த காட்டில் இமயன் போன்று ஒரு வேடன் ஒருவனைப் பார்க்கிறது; "இன்றைக்கு இவன் முகத்தில் விழித்திருக்கிறோம்; என்ன கெடுதல் நடக்கப் போகிறதோ தெரியவில்லையே என்று கலங்குகிறது; அந்த கலக்கத்துடனேயே அது பறந்து சென்றது

மூடன்  "கவலைப்படுவதற்கு ஆயிரம் விஷயங்கள் உள்ளன என்றும்; அஞ்சுவதற்கு நூற்றுக் கணக்கில் நடக்கின்றன" என்றும் புலம்புவானாம்;

வந்த வேடன், தன்னிடம் இருந்த அரிசிக்குறுணியை நிலத்திலே சிதறி விட்டான்; அந்த இடத்தில் ஒரு வலையைப் போட்டு வைத்தான்; மரத்துக்கு மறைவில் நின்று கொண்டான்;

அப்போது ஆகாயத்தில், புறாக்கள் கூட்டமாகப் பறந்து சென்றன; அதில் சில புறாக்கள் இந்த அரிசிக்குறுணியை பார்த்து விட்டன; அவற்றை தின்பதற்காக, கீழே இறங்கி வர எத்தனித்தன; இதைக் கண்ட புறாக்களின் அரசன் (அரச புறா) "இங்கு மக்கள் நடமாட்டமே இல்லாத இடத்தில் அரிசிக்குறுணி எப்படி வரும்? இதில் ஏதோ சூது இருக்கிறது; நாம் யாரும் கீழே இறங்கக் கூடாது;" என்று கட்டளை இட்டது:

அதைத் தொடர்ந்து, அரசு புறா, மற்ற புறாக்களுக்கு, "வழிப்போக்கன் புலியிடம் மாட்டிக் கொண்ட கதையைக்" கூறியது;
அந்த புலிக்கதைதான் இங்கு "இதோபதேசம்-1" என்று கூறப்பட்டுள்ளது;

(விஷ்ணுசர்மா என்னும் பண்டிதரின் இதோபதேசம் என்னும் நீதிக் கதைகளிலிருந்து ஒரு பகுதி).
**



No comments:

Post a Comment