Sunday, February 28, 2016

கந்தரலங்காரம்-22

கந்தரலங்காரம்-22

மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
கைதான் இருபது உடையான் தலை பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

(மொய்க்கும் மாலை சூடிய குழல் என்னும் கூந்தலை உடைய வள்ளியை மணந்தவன், முத்தமிழால், தன்னைத் திட்டியவரையும் அங்கு வாழவைப்பவன், வெய்ய வாரணன் என்னும் யானையைப் போன்ற இருபது கைகளும், பத்து தலைகளையும் உடையவனை (இராவணனை) வெட்டி வீழ்த்தியவனின் (திருமாலின் அவதாரமான இராமனின்) மருமகனான, உமையாள் பெற்ற இலஞ்சியமே! (இலட்சணமே!) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-22.

மொய்தா ரணிகுழல் வள்ளியைவேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதானிருபது டையான் றலைபத்துங் கத்தரிக்க
வெய்தான்மருக னுமையாள் பயந்தவிலஞ்சியமே.

 (கந்தரலங்காரம்-22).

No comments:

Post a Comment