Showing posts with label கிண்கிணி முகுள. Show all posts
Showing posts with label கிண்கிணி முகுள. Show all posts

Sunday, January 25, 2015

கிண்கிணி முகுள...

மரணப் ரமாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணைகிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுளசரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷாபரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.
(அருணகிரநாதரின் கந்தரலங்காரம்)
*
மரணப் பிரமாதம் நமக்கு இல்லையாம்;
(மரணம் என்னும் பெரும்நிகழ்வு நமக்கு வருவதில்லை);

என்றும் வாய்த்த துணை கிரணக் கலாபியும் வேலும் உண்டே;
(நமக்கு எக்காலமும் வாய்ப்பான, (கிரண) கதிர்வீசும் தோகையும் வேலும் உண்டு);

கிண்கிணி முகுள சரணப் பிரதாப;
(கிண்கிணி என்னும் சதங்கை அணிந்த பாதங்களை உடைய பிரதாபரே);

சசிதேவி மங்கல்ய தந்து ரக்ஷா பரண கிருபாகர;
(இந்திராணியின் மாங்கல்யத்தை காக்கும் கிருபாகரரே);

ஞானாகர சுர பாஸ்கர;
(ஞானத்தின் இருப்பிடமான, தேவ சேனாதிபதியே);