திருவிளையாடல்-20
சிவன் ஒரு சித்தராக வேடம் கொண்டு மதுரையை அடைகிறார்; அவரிடம் ஒரு மந்திரக்
கோல் இருக்கிறது; அதை உடம்பில் தடவி விடுகிறார்; அதைக் கொண்டு, ஆண்களை பெண்களாக
மாற்றி விடுகிறார்: அதுபோல பெண்களை ஆண்களாக மாற்றி விடுகிறார்; வயதானவரை இளைஞராக
மாற்றி விடுகிறார்; கூன் முதுகு கொண்ட ஒரு வயதான பெண்ணை, ஒரு இளம் மங்கையாக்கி,
அவளைக் கருத்தரிக்கும் படி இளமையுடன் மாற்றி விடுகிறார்; மிக தூரத்தில் உள்ள மலைகளை
மிக அருகில் கொண்டுவந்து காண்பிக்கிறார்; பக்கத்தில் உள்ள மாட மாளிகைகளை வெகு
தூரத்தில் காண்பிக்கிறார்; வறிய ஏழையை செல்வந்தராக்கி விட்டார்; செல்வந்தரை
வறியவர் ஆக்கி விட்டார்;
இப்படி அதியசங்களைச் செய்துவிட்டு மதுரை வீதிகளில் சுற்றித் திரிகிறார்;
அப்போது மதுரையை அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்கிறான்; இந்த விபரத்தைக்
கேள்விப்பட்டு, அந்த சித்தரை அழைத்துவரும்படி ஆணையிடுகிறான்; வீரர்கள் சென்று
அழைத்தும் வர மறுக்கிறார் அந்த சித்தர்; அமைச்சரே நேரில் வந்து அழைக்கிறார்;
சித்தர் வர மறுக்கிறார்;
இப்படி, யார் அழைத்தும் வராமல் இறுமாப்புடன் அந்த சித்தர் மதுரைத் தெருக்களில்
சுற்றித் திரிந்த விளையாடலே சிவனின் 20-ம் திருவிளையாடல்.
No comments:
Post a Comment