Tuesday, October 18, 2016

திருவிளையாடல்-20

திருவிளையாடல்-20

சிவன் ஒரு சித்தராக வேடம் கொண்டு மதுரையை அடைகிறார்; அவரிடம் ஒரு மந்திரக் கோல் இருக்கிறது; அதை உடம்பில் தடவி விடுகிறார்; அதைக் கொண்டு, ஆண்களை பெண்களாக மாற்றி விடுகிறார்: அதுபோல பெண்களை ஆண்களாக மாற்றி விடுகிறார்; வயதானவரை இளைஞராக மாற்றி விடுகிறார்; கூன் முதுகு கொண்ட ஒரு வயதான பெண்ணை, ஒரு இளம் மங்கையாக்கி, அவளைக் கருத்தரிக்கும் படி இளமையுடன் மாற்றி விடுகிறார்; மிக தூரத்தில் உள்ள மலைகளை மிக அருகில் கொண்டுவந்து காண்பிக்கிறார்; பக்கத்தில் உள்ள மாட மாளிகைகளை வெகு தூரத்தில் காண்பிக்கிறார்; வறிய ஏழையை செல்வந்தராக்கி விட்டார்; செல்வந்தரை வறியவர் ஆக்கி விட்டார்;

இப்படி அதியசங்களைச் செய்துவிட்டு மதுரை வீதிகளில் சுற்றித் திரிகிறார்; அப்போது மதுரையை அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்கிறான்; இந்த விபரத்தைக் கேள்விப்பட்டு, அந்த சித்தரை அழைத்துவரும்படி ஆணையிடுகிறான்; வீரர்கள் சென்று அழைத்தும் வர மறுக்கிறார் அந்த சித்தர்; அமைச்சரே நேரில் வந்து அழைக்கிறார்; சித்தர் வர மறுக்கிறார்;


இப்படி, யார் அழைத்தும் வராமல் இறுமாப்புடன் அந்த சித்தர் மதுரைத் தெருக்களில் சுற்றித் திரிந்த விளையாடலே சிவனின் 20-ம் திருவிளையாடல்.

No comments:

Post a Comment