திருவிளையாடல்-21
சிவன், சித்தராக வேடமிட்டு மதுரை வீதிகளில் திரிகிறார்; பாண்டிய மன்னனின்
அமைச்சர் அழைத்தும் வர மறுக்கிறார்;
இப்படிப்பட்ட சித்தர் யாராக இருக்கும் என வியந்து பாண்டிய மன்னனே நேரில்
சென்று பார்த்தவர விரும்புகிறார்; தெருவில் திரியும் சித்தரை நேரில் சந்திக்கிறார்
பாண்டிய மன்னர்;
மன்னருக்கு ஒரு சந்தேகம்; இந்த சித்தர் உண்மையில் சித்தர்தானா? என்று சோதிக்க
நினைத்து, அவ்வழியே சென்ற உழவர் கையில் இருந்து கரும்பு ஒன்றை வாங்கி, “நீர்
எல்லாம் வல்ல சித்தராக இருந்தீர் என்றால், இந்த கரும்பை, உன் எதிரில் இருக்கும்
கல்லால் ஆன இந்த யானையிடம் கொடுத்து அதை தின்னச் செய்யுங்கள் பார்க்கலாம்?” என்று
கேட்கிறார்;
இதை அறிந்த சித்தர், அந்த கல் யானையைப் பார்த்து கண்ணைச் சிமிட்டுகிறார்; அந்த
கல் யானை உயிர் பெற்று எழுந்து வந்து, மன்னர் கையில் வைத்திருக்கும் கரும்பை
பிடித்து இழுத்து தன் வாயில் வைத்த கடித்து தின்றது;
இவர் உண்மையில் சித்தர் தான் என்று மன்னர் வியக்கிறார்;
இவ்வாறு, சிவன் செய்த விளையாடலே 21-ம் திருவிளையாடல்.
No comments:
Post a Comment