Tuesday, October 18, 2016

அன்னையே! எனக்கேதும் கொடுத்திலையே?


வேல் கொடுத்தாய் திருச்செந்தூரர்க்கு;
அம்மியின் மீது வைக்கக் கால் கொடுத்தாய் நின் மணவாளனுக்கு;
கவுணியர்க்குப் பால் கொடுத்தாய்;
மதவேளுக்கு மூவர் பயப்படச் செங்கோல் கொடுத்தாய்;
அன்னையே! எனக்கேதும் கொடுத்திலையே?

(திருச்செந்தூர் வாழ் செந்தில் ஆண்டவனுக்கு வேல் கொடுத்தாய்;
உன் மணவாளன் அம்மியின் மீது வைப்பதற்காக உன் கால் கொடுத்தாய்;
கவுணியர் என்னும் திருஞானசம்பந்தனுக்கு சிவஞானப்பாலைக் கொடுத்தாய்;
மன்மதனுக்கு கரும்புவில்லைக் கொடுத்தாய்;
தாயே, எனக்கு ஏதும் கொடுக்கவில்லையே!)

No comments:

Post a Comment