Tuesday, January 3, 2017

சுக்கிரன்

சுக்கிரன்:
சுக்கிரனின் தாய் தேவலோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தபோது, விஷ்ணுவால் கொல்லப்பட்டாள்;
இந்த சுக்கிரன், மகாபலி சக்கரவர்த்தியிடம் மந்திரியாக இருந்தார்; அப்போது, விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து வந்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி அளவு நிலம் வேண்டும் என்று கேட்கிறார்; அப்போது, அங்கு மந்திரியாக இருந்த சுக்கிரன், "இந்த வேடத்தில் வந்திருப்பது விஷ்ணுவாகத்தான் இருக்கும்; எனவே இந்த வாமனனை நம்பாதே மன்னா" என்று மகாபலியிடம் தடுக்கிறார்; அதனால் கோபம் கொண்ட விஷ்ணு, சுக்கிரனின் ஒரு கண்ணைக் கெடுத்து விடுகிறார்;
சுக்கிரன், இறந்தபோன உயிரையே உயிர் கொடுத்து எழுப்பும் வல்லமை கொண்டவர்; இவர் அசுரர்களுக்கு குருவாக இருக்கிறார்; இந்த சுக்கிரன், பிரமமானச புத்திரர்களில் ஒருவரான பிருகு முனிவரின் பேரன்;
**


No comments:

Post a Comment