விஷ்ணு, இராவண சங்காரத்தின் பொருட்டு,
விண்ணுலகை விட்டு மண்ணுலகுக்கு இராமனாகப் பிறக்கப் புறப்படுகிறார்;
அப்போது, அவர் இங்கு வருவதற்கு முன் ஏற்பாடாக,
சில தேவர்களை இந்த மண்ணுலகில் முன்பே பிறப்பதற்கு அனுப்பி வைக்கிறார்;
அப்போது ஒரு தேவர், சூரியனின் அம்சமாகப் பிறக்கிறார்;
அவரே சுக்ரீவன் என்பவர்;
சுக்ரீவன் பம்பைக் கரையில் உள்ள இடத்தில் பிறக்கிறார்; இந்த சுக்ரீவனை துணையாக வைத்துக் கொள்ளும்படி,
இராமனுக்கு சொல்கிறான் கவந்தன் என்பவன்; சுக்ரீவனைச்
சந்திக்கிறார் இராமன்; இராமனின் வில் வித்தையைச் சோதிக்க நினைக்கிறார்
சுக்ரீவன்; அப்போது, ஏழு மாமரங்கள் வேறு
வேறு இடத்தில் இருப்பதை, தனது ஒரே அம்பால் துளைத்து விடுகிறார்;
சுக்ரீவன், இராமனின் வில்லாண்மையை நம்புகிறார்;
இருக்ஷவிரஜன் என்ற மன்னருக்கு இரண்டு புத்திரர்கள்; ஒருவர் வாலி; மற்றவர்
சுக்ரீவன்; இந்த சுக்ரீவனின் அண்ணனே வாலி; சுக்ரீவனின் மனைவி பெயர் உருமை; சுக்ரீவனின் நாட்டையும்,
அவன் மனைவியையும் அபகரித்துக் கொண்ட வாலி, தம்பி
சுக்ரீவனை விரட்டி விடுகிறான்; அப்போதுதான், சுக்ரீவன் பம்பை நதிக்கரையில் வசிக்கிறார்;
இராமன் மீது நம்பிக்கை வந்தவுடன், சுக்ரீவன், தன் கஷ்டங்களை கூறுகிறார்; இராமர், வாலியை மறைந்திருந்து அம்பு எய்து கொன்று,
அவன் அபகரித்த நாட்டை, சுக்ரீவனுக்குக் கொடுக்கிறார்;
மன்னர் பதவி திரும்பக் கிடைத்தவுடன், தன் நாட்டிலேயே சுகபோகமாக வாழ ஆரம்பிக்கிறார்; இராமனைக்
கண்டுகொள்ளவில்லை; நன்றி மறக்கிறார்; இராமர்,
தன் தூதுவனை அனுப்பி, அவர் நாட்டின் மீது படையெடுக்கப்
போவதாக அறிவிக்கிறார்; அதனால் பயந்து கொண்டு, தானும் தன் படைகளும் சேர்ந்து வந்து இராமனைச் சரண் அடைகிறார் சுக்ரீவன்;
இராமருக்கு உதவுவதாக வாக்கு அளிக்கிறார்;
சுக்ரீவனின் படை இலங்காபுரிக்குச் செல்கிறது; அங்கு, ஒரு பெரிய மலையை பெயர்த்து எடுத்துவந்த
சுக்ரீவன், அந்த மலையை இராவணனின் மார்பின் மீது மோதுகிறார்;
இராவணனோ, கோபம் கொண்டு, தன்
வேலை எடுத்து சுக்ரீவன் மீது எறிகிறார்; அந்த வேலை, அனுமன் பிடித்து, தன் முழங்காலில் வைத்து ஒடித்து வீசுகிறார்;
இராவணனும் ஒரு மலையைப் பெயர்த்து, சுக்ரீவன் மீது
மோத, சுக்ரீவன் விழுந்து மூர்ச்சை ஆகிறார்; அப்போது இராவணன், சுக்ரீவனை தன் கையில் தூக்கி தன் இடுப்பில்
வைத்துக் கொண்டு போக, மயக்கம் தெளிந்த சுக்ரீவன், இராவணனின் இடுப்பை தன் நகங்களால் கிழித்து, பற்களால்
கடித்து குதறிவிடுகிறார்; அப்போது கிடைத்த இடைவெளியில் சுக்ரீவன்,
இராவணனின் பிடியில் இருந்து தப்பிக்கிறார்;
**
No comments:
Post a Comment