இரணிய கசிபன் வம்சத்தில் பிறந்தவர்கள் சுந்தோபர், சுந்தர் என இருவர்; இவர்கள் இருவரும் நிசுந்தன் புத்திரர்கள்; இவர்கள் இருவரும்
பெரும் தவம் செய்கிறார்கள்; பிரம்மாவை நினைத்து தவம் செய்கிறார்கள்;
பிரம்மா இவர்களின் முன்னர் தோன்றுகிறார்; "நாங்கள் இருவரும், நாங்கள் நினைத்த உடலை எடுக்க வேண்டும்
என்றும் நினைத்த இடத்துக்கு உடனே போக வேண்டும் என்றும் யாரும் எங்களை கொன்று விடக்
கூடாது" எனக் கேட்கிறார்கள்; பிரம்மாவும் அப்படியே கொடுக்கிறார்:
அதன்பின்னர் சகோதரர்கள் இருவரும் பல மாயாஜாலங்கள் செய்கிறார்கள்; மக்களை கொடுமைப் படுத்தி வருகிறார்கள்;
இவர்கள் இருவரின் கொடுமைகளை ஒடுக்க சிவன் நினைக்கிறார்; விசுவகர்மாவை அழைத்து, ஒரு மிகஅழகான பெண்ணை உருவாக்கச் சொல்கிறார்; அவளை அந்த
இருவர்கள் இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கிறார்; அவளைப் பார்த்தவுடன்,
அந்த சகோதரர்கள் இருவரும் ஆசை கொள்கிறார்கள்;
ஆனால், அவளோ, "உங்களில் யார் பெரிய வீரனோ, அவரையே நான் திருமணம் செய்வேன்"
என்று கூறி விடுகிறாள்;
அவளை அடைவதில், சகோதரர்கள்
இருவருக்கும் போட்டி உண்டாகிறது; இருவரும் மல்யுத்தம் நடத்துகின்றனர்;
வேறு ஒருவரால் மட்டுமே இருவரும் இறக்க மாட்டார்கள் என்று வரம் வாங்கி
வந்தவர்கள்; ஆனால், அவர்கள் இருவரும் ஒருவருக்கு
ஒருவர் போரிட்டு ஒருவரை ஒருவர் வெட்டி இறக்கிறார்கள்; வரம் பெறும்போது
சரியாக கேட்டுக் கொள்ளவில்லை;
**
No comments:
Post a Comment